|
|
|
|
| Wednesday 8 October, 2008 |
|
|
|
|
|
|
|
|
|
|
|
| |
|
|
|
Tamil Song - Nee Varuyaay ena
Another excellent song of recent time. Watch here : http://www.youtube.com/watch?v=Jn_j04vUC7Q
பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என.. பூத்துப் பூத்து புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாய் என.. தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன் தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன் வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன் வார்த்தையாக நீ வருவாயா கவிதையாகிறேன்..
நீ வருவாய் என.. நீ வருவாய் என..
கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம் தினம் சேகரித்தேன் குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகி விட்டேன் கவிதை நூலோடு கோலப்புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன் கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன்
ஒரு காகம் காவென கரைந்தாலும் உன் வாசல் பார்க்கிறேன்
நீ வருவாய் என.. நீ வருவாய் என..
எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை எழுதிய கவிதைகள் உனைவந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை உலகில் பெண் மட்டும் நூறு கோடியாம்..ம் அதிலே நீயாரடி சருகாய் அன்பே நான் காத்திருக்கிறேன் எங்கே உன் காலடி
மணி சரிபார்த்து தினம் வழி பார்த்து இரு விழிகள் தேய்கிறேன்
நீ வருவாய் என.. நீ வருவாய் என..
படம் : நீ வருவாய் என பாடியவர் : எஸ்.பி.பி(on Screen : Parthiban) பாடல் வரிகள் : பா. விஜய் இசை : எஸ். ஏ. ராஜ்குமார்
|
|
| | |
|
|
|
|
|
|
|